DEDICATED TO BELOVED FANS OF THALA AJITH KUMAR

Sunday, December 26, 2010

விஜய்க்கு வாழ்வா ? சாவா ?


வரும் பொங்கலுக்கு திரையரங்கில் போட்டிப் போடுகிறவர்கள் அனைவருமே இளைஞர்கள்.தற்போதய நிலவரப்படி பொங்கலுக்கு வெளிவரும் படங்களை பற்றி ஒரு பார்வை.....

இன்றைய நிலவரப்படி நான்கு முக்கியமான படங்கள் பொங்கலுக்கு திரைக்கு வருகின்றன.

முதலாவது, முதல் படத்திலேயே சென்சிபிள் இயக்குனர் என்று பெயரெடுத்த வெற்றிமாறனின் ஆடுகளம். மதுரையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என அனைவரும் நம்புகின்றனர். தனுஷ் இதன் ஹீரோ.
வெற்றிமாறனும் தனுசும் இணைந்த பொல்லாதவன் வெற்றி பெற்றது இப்படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.......கலாநிதி மாறனின் அடுத்த வெளியீடு ...விளம்பரத்தை பற்றி சொல்ல தேவை இல்லை..........


அடுத்து விஜய்யின் காவலன். பல தடைகளை தாண்டிவரும் படம். ஆனால் விஜய்யின் உண்மையான தடை அவரது முந்தையப் படங்களின் பலவீனமான கலெ‌க்சன். காவலன் அதனை கண்டிப்பாக மாற்றியாக வேண்டும். பாசிஸ ராஜபக்சேயின் பிரச்சார ஊதுகுழல் அசின் காவலனில் நடித்திருப்பதால் படத்தை புறக்கணிக்க உலகமெங்கும் உள்ள ஈழத்தமிழரும், தமிழ் அமைப்புகளும் அழைப்பு விடுத்திருப்பது செவிசாய்க்க வேண்டிய ஒன்று. விஜய்க்கு இது வாழ்வா சாவா என்பது மாதிரி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இப்படம் வெளிவருகிறது.....


மூன்றாவது கார்த்தியின் சிறுத்தை. பையா, நான் மகான் அல்ல கார்த்தியை கோடம்பாக்கத்தின் புதிய கலெ‌க்சன் பாய் ஆக்கியிருக்கிறது. சிறுத்தையில் அது தொடருமா என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம். தொடர் ஹிட் கொடுத்த கார்த்தியின் அடுத்த படம்....இதில் போலீஸ், பிக் பாக்கெட் என முதல் முறையாக இரு வேடங்களில் நடித்துள்ளார்......

இறுதியாக இளைஞன். நொடிக்கொரு விளம்பரம் போட்டாலும் போட்டது திரும்ப வருமா என்ற பயம் பணம் போட்டவருக்கும் உழைப்பை போட்டவர்களுக்கும் இருக்கிறது. இதனால் பொங்கலுக்கென்று அறிவித்த படம் கொஞ்சம் தாமதமாக வரவும் சாத்தியமுள்ளது.அதுதான் நல்லதும் கூட......
தேர்தல் நெருங்கும் நேரத்தில் கலைஞர் இது மாதிரி கதை வசனம் எழுதாமல் இருப்பது நல்லது என நான் நினைக்கிறேன்....

No comments:

Post a Comment